சூரியனா
சந்திரான
உன் முகத்தை சொல்லுகிறேன்
இப்படி பிரகாசித்தும்
குளுமையை உணரமுடிகிறதே ?..
நீ தலைவாரும்
சீப்பில் பற்களுக்கு பதிலாக
பூ இதழ்களால் செய்யப்பட்டதாமே ?..
பூக்கள் உன்னை
சூடிகொள்கிறன
நீ எதை சூடிகொல்கிறாய் ?..
உன் அழகு சிந்தும்
வெட்க்கத்தை எல்லாம்
உதடுகள் பூசிகொள்கின்றனவா ?..
பிறை நிலாவா
உன் புருவங்களுக்கு மத்தியில்
பொட்டாக இருப்பது ?..
நீ அழகு பார்க்கும்
நிலைகண்ணாடியை பார்க்கவேண்டும்
அது அழகு தேக்கியா என்று ?..
சங்கு கழுத்து
என்று சொல்லுவது
உன் கழுத்தை பார்த்துதானே ?..
மார்பை கலசங்கள்
என்று வர்ணிக்கின்றன
சங்க இலக்கியங்கள்
உன் மார்பு போல்
கலசங்கள் என்று இனி
வர்ணிக்கலாமா ?..
கொடி இடை என்பது
சரிதான் ஆனால் ஒரு
சந்தேகம் உன்னிடை
எந்தவகை கொடி ?..
சந்தன மரங்களோ
உன் கால்கள்
அப்பா [...]
ஆகஸ்ட், 2009 க்கான தொகுப்பு
கேள்வியல்ல ஆச்சரியங்கள்…!!!
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 24/08/2009 | 1 மறுமொழி »
நீ திருடியா ?…
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 24/08/2009 | Leave a Comment »
உனக்கு ஒரே ஒரு வேலைதான்
என் இதயத்தை திருடுவது
எனக்கு இரண்டு வேலை
ஒன்று பறிகொடுத்த இதயத்தை மீட்ப்பது
இரண்டாவது மீட்ட இதயத்தை
திரும்ப உன்னிடம் பறிகொடுப்பது
ஒரு ஒரு முறையும்
நீ திருடி செல்லும்
அழகை யாரால் வர்ணிக்க முடியும்
என் இதயசிறையில்
உன்னை கைதுசெய்கிறேன்
இதயமெனும் சிறைச்சாலையை
திருடிசெல்வது தெரிந்தும்
என் வார்த்தைகள் எல்லாம்
உன்னிடம் வந்தால்
மௌனமாக்கபடுகின்றன
நீ வார்த்தைகளையும் திருடும்
வார்த்தை திருடி
என்னருகில் வரும்போதெல்லாம்
மலர்களின் வாசத்தை திருடி
என் மீது வீசி செல்கிறாய்
என் கண்களை திருடிவிட்டு
உன்னை விட்டு செல்கிறாய்
உன் அழகால் என்னை குருடனாக்கி
முத்தம் தரும்போதெல்லாம்
என் கவலைகளை திருடிகொள்கிறாய்
கவலை திருடி இன்பம் தருகிறாய்
நீ திருடியா ?…
இல்லை இல்லை
நீ திருடியாக இருக்கமுடியாது
என் காதலியாக [...]
எதிர்பார்ப்பு
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 21/08/2009 | Leave a Comment »
பிரிக்கப்படாத நிவாரணம்கோரி
அனுப்பபட்ட ஏழை மனுவை போல்
எழுதப்படாத உன்
மின்னஞ்சலை எதிர்ப்பார்த்து
காத்துகிடகிறது என்கண்கள்
வரம்வேண்டி தவம்புரியும்
பக்தனை போல் நான்
அவனை சோதிக்கும்
தெய்வத்தை போல் நீ
கைபேசியில்
ஒளி ஒளிர்ந்தவுடன்
ஒலி ஒலிக்கும் முன்
நீதான் அழைக்கிறாய் என
முந்திசெல்லும் பார்வைக்கு
ஏமாற்றம் வாடிக்கையாகிபோனது
ஏமாறுவது ஒன்றும் புதிதல்ல
ஏமாற்றுவது நீ என்பது தான்
புதிது எனக்கு
